Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » தூய நெஞ்சக் கல்லூரி சார்பில் இரு நாள் சமூக விரிவாக்க நிகழ்ச்சி

தூய நெஞ்சக் கல்லூரி சார்பில் இரு நாள் சமூக விரிவாக்க நிகழ்ச்சி

தினக்கதிர்By தினக்கதிர்August 28, 20261 Min Read47 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) முதுகலை கணினி அறிவியல் துறை சார்பில், பெருமாப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் பெருமாப்பட்டு கிராமத்தில் இரு நாள் சமூக விரிவாக்க நிகழ்ச்சி ஆகஸ்ட் 27, 28-ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை துறைத் தலைவர் முனைவர் ம. பூவிழி, சமூக விரிவாக்க பொறுப்பாசிரியர் முனைவர் ஆ. மேகலா, உதவிப் பேராசிரியர் தே. கஜலட்சுமி ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு:
முதல் நாளில் பெருமாப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்வியின் முக்கியத்துவம், சாலைப் பாதுகாப்பு, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், கைப்பேசி பயன்பாடு மற்றும் சமூக ஊடக விழிப்புணர்வு குறித்து கல்லூரி மாணவர்கள் நாடகம், பேச்சு, பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைத்தனர்.இதில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கிராம மக்களுக்கு விழிப்புணர்வு:
இரண்டாம் நாளில் பெருமாப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகாதேவராஜ், ஊராட்சி செயலர் அருள், மக்கள் நலப் பணியாளர் பழனி, இளைஞரணி தலைவர் ராஜேஷ் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

இதில் கல்வியின் முக்கியத்துவம், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், வேளாண்மை மற்றும் கல்விக்கான மத்திய அரசு திட்டங்கள் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் துறைத் தலைவர் முனைவர் ம. பூவிழி, சமூக விரிவாக்க பொறுப்பாசிரியர் முனைவர் ஆ. மேகலா, உதவிப் பேராசிரியர் தே. கஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாணவர்களின் சமூகப் பங்களிப்பை கிராம மக்கள் பாராட்டினர். இரு நாள் சமூக விரிவாக்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#BreakingNews #CollegeStudents #SocialAwareness #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #TamilNews #Thirupathur #TreePlantation #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleஜீப் சாகசம்… ஜாலி பயணம்… ஜீப் பறிமுதல்; ஒருவர் கைது – ஜெயில் பயணம்!
Next Article தீ வந்தால் திணறாதீங்க… தீயணைப்பானை தூக்கிப் பிடிங்க! – துறையூரில் ‘தீ’ பாதுகாப்புப் பயிற்சி
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.