வேலை வாங்கித் தருவதாகவும், அரசு ஊழியர்களுக்கு மாறுதல் பெற்றுத் தருவதாகவும் கூறி ஒருவர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது X தள பதிவில், “கோட்டை வட்டாரத்தில் ‘நாஞ்சில் ஜீவா’ என்ற பெயரில் ஒரு மோசடிப் பேர்வழி உலவி வருகிறான். வேலை வாங்கித் தருகிறேன்; மாறுதல் பெற்றுத் தருகிறேன் எனக் கூறி ஏமாற்ற முயற்சி செய்கிறான்.
அவனுக்கும் எனக்கும், எனது குடும்பத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.
அரசு வேலை மற்றும் பணிமாறுதல் தொடர்பாக பணம் கேட்டு அணுகும் நபர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

