திமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள் தொடர்பாக 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, மாவட்டச் செயலாளர் பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் இரண்டு முறை மட்டுமே மாவட்டச் செயலாளர் பதவியை வகிக்க முடியும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒன்றியச் செயலாளர்களுக்கு 60 வயதும், நகரச் செயலாளர்களுக்கு 60 வயதும், பேரூர் செயலாளர்களுக்கு 50 வயதும், மாநகராட்சி வட்டச் செயலாளர்களுக்கு 50 வயதும் வயது வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிளைச் செயலாளர்களுக்கான வயது வரம்பு 45 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இனி நீக்கப்படும் என்றும், கட்சியில் 110 மாவட்டச் செயலாளர் பதவிகள் உருவாக்கப்படும் என்றும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியின் நிர்வாக கட்டமைப்பை மாற்றி அமைத்து, புதிய தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் வகையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

