Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Saturday, September 12
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » சேவைத் துறையா? வியாபார நிறுவனமா? – அரசுப் பேருந்து சேவை குறைப்பு குறித்து பொதுமக்கள் கேள்வி

சேவைத் துறையா? வியாபார நிறுவனமா? – அரசுப் பேருந்து சேவை குறைப்பு குறித்து பொதுமக்கள் கேள்வி

தினக்கதிர்By தினக்கதிர்August 19, 20262 Mins Read225 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வருவாய் குறைவு என்பதால் பேருந்து இயக்கம் குறைப்பு: கிராமப்புற மக்கள் பாதிக்கப்படும் அபாயம்

அரசுப் போக்குவரத்து கழகங்களில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் குறைவாக உள்ள வழித்தடங்களில் பேருந்து சேவைகளை குறைப்பது தொடர்பான நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

கல்வி, மருத்துவம், பொதுப்போக்குவரத்து உள்ளிட்டவை அரசின் அடிப்படை சேவைத் துறைகள். இவை வெறும் லாப, நஷ்ட கணக்கில் பார்க்கப்பட வேண்டியவை அல்ல என்ற கருத்து நீண்ட காலமாக நிலவி வருகிறது. இந்த நிலையில், வருவாய் குறைவு காரணமாக அரசுப் பேருந்து சேவைகள் குறைக்கப்படுவது சரியான அணுகுமுறையா என்ற விவாதம் எழுந்துள்ளது.

  • டீசல் செலவு குறைப்பு… மக்கள் சிரமம் அதிகரிப்பா?

போக்குவரத்து குறைவாக உள்ள நாட்கள் மற்றும் வருவாய் குறைவாக கிடைக்கும் வழித்தடங்களில் பேருந்து இயக்கத்தை மறுசீரமைக்க போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதற்கட்டமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில புறநகர் பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருவாய் இழப்பை குறைத்து, டீசல் செலவை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், கிராமப்புற மக்கள் இதனால் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், மருத்துவமனை செல்லும் முதியவர்கள், தினசரி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் அதிக சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.

  • பொதுப்போக்குவரத்து லாபத்திற்கானதா?

அரசுப் பேருந்துகள் பொதுமக்களின் அன்றாட வாழ்வின் முக்கிய இணைப்பாக உள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களில் பலருக்கு அரசு பேருந்துகளே ஒரே போக்குவரத்து வசதியாக இருந்து வருகிறது.

எனவே, பொதுப்போக்குவரத்தை லாபம் ஈட்டும் நிறுவனமாக மட்டும் அணுகாமல், மக்கள் சேவையாக அரசு பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  • மக்கள் சேவைக்கு நிதி இல்லை… சலுகைகளுக்கு நிதி உள்ளதா?

இதற்கிடையே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் புதிய சலுகைகள் குறித்தும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மக்கள் பிரதிநிதிகளுக்கான வாகனம், அதன் பராமரிப்பு செலவு, உதவியாளர் மற்றும் ஓட்டுநர் சம்பளம் உள்ளிட்ட வசதிகளுக்கு அரசு நிதி ஒதுக்கும் நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தும் அரசுப் பேருந்து சேவைகளை குறைப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

“அடிப்படை வசதிகளான போக்குவரத்துக்கு நிதி பற்றாக்குறை என்று கூறும் நிலையில், மக்கள் பிரதிநிதிகளுக்கான கூடுதல் சலுகைகளுக்கு முன்னுரிமை அளிப்பது நியாயமா?” என பொதுமக்கள் கேட்கின்றனர்.

அரசுப் போக்குவரத்து என்பது சாதாரண பயண வசதி மட்டுமல்ல; அது ஏழை, நடுத்தர மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட வாழ்க்கைத் தேவைகளுடன் நேரடியாக தொடர்புடையது.

எனவே, வருவாய் கணக்கை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பேருந்து சேவைகளை குறைப்பதற்கு பதிலாக, மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாற்று நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகளுக்கான செலவுகளை மறுபரிசீலனை செய்து, அந்த நிதியை பொதுமக்கள் பயன்பெறும் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#AIADMK #BreakingNews #tamil #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #TamilNews #Tngovt #TVK #TVKVijay
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதெருநாய்கள் பாதுகாப்பில் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும்: விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை
Next Article மாணவர்கள் போராட்ட விவகாரம்: நடவடிக்கை உத்தரவை திரும்பப் பெற்றது கல்லூரிக் கல்வித்துறை
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Dinakkadir

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026
Dinakkadir

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.