Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ரூ.100 கோடி பழனி கோவில் நில மோசடி வழக்கு: சிறையில் வழக்கறிஞர் உயிரிழப்பு

August 9, 2026

வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்ட 600 பேர் கைது

August 8, 2026

டாஸ்மாக் மதுபானத்திற்கு கூடுதல் விலை வசூலித்தல்: உடனடியாக FIR பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, August 9
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » ரூ.100 கோடி பழனி கோவில் நில மோசடி வழக்கு: சிறையில் வழக்கறிஞர் உயிரிழப்பு

ரூ.100 கோடி பழனி கோவில் நில மோசடி வழக்கு: சிறையில் வழக்கறிஞர் உயிரிழப்பு

தினக்கதிர்By தினக்கதிர்August 9, 20262 Mins Read101 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் எஸ். அன்வர்தீன் (65), மதுரை மத்திய சிறையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில், கோயில் பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்த தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த நிலம் குறைந்த மதிப்பீட்டில் தனியாருக்கு சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக அறநிலையத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்றதாக கூறப்படும் பள்ளி ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, இடைத்தரகர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில் வழக்கறிஞர் அன்வர்தீன் முக்கிய பங்காற்றியதாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. நில விற்பனை தொடர்பாக விற்பனையாளர் மற்றும் வாங்குபவர்களை ஒருங்கிணைத்தது, ஆவண நடவடிக்கைகளில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டன.

கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த அன்வர்தீனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சிறையில் இருந்தபோது அன்வர்தீனுக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக சிறைத் துறையினர் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மதுரை கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு முக்கிய குற்றவாளியான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

(குறிப்பு: வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டியுள்ளது.)

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்
#BreakingNews #PaidReviewScam #Palani #PalaniLandScam #TamilagaVetriKazhagam #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #TNCM #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleவங்கி கணக்குகளை வாடகைக்கு விட்ட 600 பேர் கைது
தினக்கதிர்
  • Website

Related Posts

News

வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்ட 600 பேர் கைது

August 8, 2026
News

டாஸ்மாக் மதுபானத்திற்கு கூடுதல் விலை வசூலித்தல்: உடனடியாக FIR பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

August 7, 2026
News

அரசு சேவைகளைப் பெற உரிமைச் சட்டம்:-“சாமானியருக்காக துணிந்த முதல்வர் விஜய்!”

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,061 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,927 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,287 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

ரூ.100 கோடி பழனி கோவில் நில மோசடி வழக்கு: சிறையில் வழக்கறிஞர் உயிரிழப்பு

August 9, 20260101 Viewsதினக்கதிர்

வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்ட 600 பேர் கைது

August 8, 20260533 Viewsதினக்கதிர்

டாஸ்மாக் மதுபானத்திற்கு கூடுதல் விலை வசூலித்தல்: உடனடியாக FIR பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

August 7, 20260205 ViewsAdmin

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,061 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,927 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,287 Views
Our Picks

ரூ.100 கோடி பழனி கோவில் நில மோசடி வழக்கு: சிறையில் வழக்கறிஞர் உயிரிழப்பு

August 9, 2026

வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்ட 600 பேர் கைது

August 8, 2026

டாஸ்மாக் மதுபானத்திற்கு கூடுதல் விலை வசூலித்தல்: உடனடியாக FIR பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

August 7, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.