குன்னூர் மலை பாதையில் அரிய வகை பறவையான இருவாச்சி பறவைகள், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் சென்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
இருவாச்சி பறவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காணப்படும் அரிய மற்றும் பாதுகாக்கப்பட்ட பறவையாகும். நீலகிரி, ஆனமலை, சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன.
இருவாச்சி பறவைகள் தொடர்பான முக்கிய செய்திகள் தமிழக வனத்துறையும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளும் இணைந்து இருவாச்சி பறவைகளின் இனப்பெருக்கத்தை பாதுகாக்க சிறப்பு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் மரவெட்டும் மற்றும் வாழ்விடம் குறைதலும் இருவாச்சி பறவைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதில் நீலகிரி மற்றும் கோவை வனப் பகுதிகளில் சமீப ஆண்டுகளில் இருவாச்சி பறவைகள் கூடு அமைக்கும் மரங்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன.
இருவாச்சி பறவை விதைகளை பரப்பும் இயற்கை வன விவசாயி என அழைக்கப்படுகிறது. காடுகளின் இயற்கை வளர்ச்சிக்கு இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
பள்ளி மாணவர்களுக்கு வனவிலங்கு விழிப்புணர்வு முகாம்களில் இருவாச்சி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இருவாச்சி பறவை பெரிய மஞ்சள் நிற அலகு மரங்களில் கூடு அமைத்து வாழும் தன்மை பழங்கள் மற்றும் சிறு உயிரினங்களை உணவாக உட்கொள்வது இந்தியாவில் பாதுகாக்கப்படும் அரிய பறவை இனங்களில் ஒன்று.
இந்த அரிய வகை பறவைகள் தற்போது குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கோழிக்கரைப் பகுதியில் தற்போது அதிக அளவில் காணப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சம சீதோசன நிலையில் தற்போது வந்துள்ள இருவாச்சி பறவைகளை ஆதிவாசி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும் மலைப்பாதையில் வரும் சுற்றுலா பயணிகளும், ஆர்வத்துடன் சென்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

