சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசுக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலினை காவல்துறை கைது செய்துள்ளது. திரு. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம்.அவர் தனது பொறுப்பின் மாண்பை உணராமல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளை தெரிவிப்பதும் கண்டிக்கத்தக்கது.
அவரது பேச்சு தொடர்பாக வழக்குப் பதிவு செய்வது என்பது வேறு. ஆனால், நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்யும் நடவடிக்கை அரசியல் பின்னணி கொண்டதா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் என்பது சட்டமன்றத்தின் முக்கியமான பொறுப்பு. அந்தப் பொறுப்பில் இருப்பவரை இல்லாமல் செய்து சட்டப்பேரவையை நடத்தும் நோக்கத்துடன் அரசு செயல்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்” என அதிமுக வலியுறுத்தியுள்ளது.

