வங்கக் கடலில் கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மியான்மர் நாட்டைச் சேர்ந்த படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 6,016.87 கிலோ மெத்தபெட்டமைன் (Methamphetamine) போதைப்பொருள் வழக்கு தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் தமிழகம் மற்றும் மிசோராமில் 13 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் 8 இடங்களிலும், மிசோராம் மாநிலத்தில் 5 இடங்களிலும் நடைபெற்ற இந்தச் சோதனையில், போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய முக்கிய நபர்களின் வீடுகள் மற்றும் இடங்களில் இருந்து பல்வேறு ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
சோதனையில் கைப்பற்றப்பட்டவை:
- இந்திய ரூபாய்: ₹1.16 கோடி
- சென்னை: ₹71 லட்சம்
- சம்ஃபாய் (Champhai), மிசோராம்: ₹22.38 லட்சம்
- ஐசால் (Aizawl), மிசோராம்: ₹20.73 லட்சம்
- அந்நிய செலாவணி:
- 53,500 அமெரிக்க டாலர்
- 1.5 லட்சம் மியான்மர் கியாட்
மேலும், சர்வதேச அளவில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும், இந்தியாவில் உள்ள அதன் தொடர்புகளுக்கும் இடையேயான வலையமைப்பை கண்டறியும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக NIA அதிகாரிகள் தெரிவித்தனர்.

