தென்காசி மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கத்தின் சார்பில் மூன்றாவது ஆண்டாக தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி மற்றும் ரோபோடிக் போட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது. இதனை செங்கோட்டை ட்ரஸர் ஐலேண்ட் பள்ளி தாளாளர் சேக் செய்யது அலி தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக தமிழக குறு சிறு தொழில் துறை அமைச்சர் மதன் ராஜா கலந்து கொண்டு கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெம்சியாதலைவர் அன்பழகன் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமை தாங்க அமைச்சர் மதன ராஜா தென்காசி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட வல்லம் பாலகிருஷ்ணன், சங்கரன்கோவில் சுப்பிரமணியன், சாமி மாரியப்பன், நாராயண சிங்கம் ஆகிய தொழில் அதிபர்களுக்கு தொழில் முன்னோடி விருது வழங்கி கௌரவித்தார்

தொடர்ந்து ஐந்து வயதிலேயே 108 நாடுகளுக்கும் மேலான தேசிய கொடிகளை 3 நிமிடங்களில் பார்த்த உடனே அந்நாட்டின் பெயர்களை கூறி உலக சாதனை படைத்த பாவூர்சத்திரம் உதயகுமார் சுபிக்ஷா தம்பதியரின் மகன் அன்புச் செழியனை பாராட்டி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர்கள் ராஜபிரகாஷ், மாரியப்பன் ,நியாஸ், டான்சியா முன்னால் தலைவர் பாபு, ஐமா தலைவர் கிரிஷ் பாண்டியன், அழகராஜா, பொருளாளர் பாஸ்கர் , மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் சங்க செயலாளர் டிடி வி. பிரேம்குமார் நன்றி தெரிவித்தார்.

