மயிலாடுதுறை அடுத்த மேலமருதாந்தநல்லூர் கிராம மக்களின் காவல் தெய்வங்களான ஸ்ரீ மகா காளியம்மன் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் ஆலய 19-ஆம் ஆண்டு பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது இங்கு மனமுருகி வேண்டும் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை அளிப்பதாகவும் பக்தர்களின் நம்பிக்கை.இத்தகைய சிறப்பு வாய்ந்த இவ்வாலயத்தின் பால்குட திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக அய்யாவையனார் ஆற்றங்கரையிலிருந்து வானவேடிக்கை,மேளதாள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம், அலகு காவடி,அலங்கார காவடி, பால்குடங்களுடன் பக்தர்கள் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.

பின்னர்,காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இதில் பக்தர்கள் பறக்கும் காவடி மற்றும் வாயில் 16அடி நீள அலகு குத்திக்கொண்டு காவடி எடுத்து வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் மேலமருதாந்தநல்லூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவல் தெய்வங்களை வழிபட்டு சென்றனர்.

