மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘யுவ புரஸ்கார்’ தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள பன்முக கலைஞரும், பிரபல திரைப்பட நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான உயர்திரு. வாகை சந்திரசேகர் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், திரைப்பட இயக்குநரும், திறன் மேம்பாட்டுப் பேச்சாளரும், தாராபுரம் மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் இளம் இயக்குனருமான புகழ், சென்னைக்கு நேரில் சென்று வாகை சந்திரசேகர் அவர்களைச் சந்தித்து தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது, கலைத்துறையிலும் பொதுவாழ்விலும் வாகை சந்திரசேகர் ஆற்றி வரும் அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்புகள் குறித்தும், இளம் தலைமுறையினருக்கு அவர் வழங்கும் உத்வேகம் குறித்தும் இயக்குனர் புகழ் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார். தாராபுரம் பகுதியின் கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாகவும் தனது வாழ்த்துகளை அவர் சமர்ப்பித்தார்.
“பன்முகத் திறமை கொண்ட ஒரு மாபெரும் கலைஞருக்கு இந்த தேசிய அங்கீகாரம் கிடைத்திருப்பது ஒட்டுமொத்த கலை உலகிற்கும் பெருமை” என்று இயக்குனர் புகழ் இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டார்.
விருது பெற்ற மூத்த கலைஞருக்கு, வளர்ந்து வரும் இளம் இயக்குனர் நேரில் வாழ்த்து தெரிவித்தது கலைத்துறையினர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

