Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Friday, September 11
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » கொளத்தூரில் தோற்ற ஸ்டாலின்; சேகர்பாபு மீது எனக்கு வருத்தம்… வெளிப்படையாக சொன்ன உதயநிதி!

கொளத்தூரில் தோற்ற ஸ்டாலின்; சேகர்பாபு மீது எனக்கு வருத்தம்… வெளிப்படையாக சொன்ன உதயநிதி!

Balasubramanian KBy Balasubramanian KAugust 25, 20262 Mins Read57 ViewsUpdated:August 25, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சேகர்பாபு மீது எனக்கு கோபம் இல்லை; எனக்கு வருத்தம்தான் உள்ளது என்று சென்னையில் நடத்த திமுக பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது, திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருணாநிதி நினைவு தினத்தை ஒட்டி, திமுக சார்பில் சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது, திமுக வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

எந்த சூழலிலும் மக்களோடு மக்களாக நிற்கக்கூடியது திமுக. அப்படித்தான் கலைஞர், ஸ்டாலின் கற்றுத் தந்தனர். சட்டசபைத் தேர்தலில் திராவிடம் 2.1 மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நாம் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், எதிரி யார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் களமிறங்கியதால் பின்னடைவைச் சந்தித்தோம். அந்தத் தவறை இனி செய்யப் போவதில்லை.

தேர்தல் தோல்விக்கு சினிமா மாயை, சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் திமுக அரசின் சாதனைகள் இளம் தலைமுறையினரிடம் முழுமையாக கொண்டு சேர்க்காதது போன்றவையே காரணம். இதையே பாடமாக ஏற்று, வரவிருக்கும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியாக மாற்றிட வேண்டும்.

சென்னையில், திமுக தோல்வியால் சேகர் பாபுவின் மீது எனக்குக் கோபம் இருப்பதாக அவர் நினைக்கலாம். அது கோபம் அல்ல, வருத்தம். இது, அவர் மீதும் எனக்குள்ள உரிமையாகும்.

தற்போதைய ஆட்சியாளர்கள், தாங்கள் வெற்றி பெற்று முதலமைச்சராகவும் அமைச்சர்களாகவும் பதவியேற்றாலும், தாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை தேர்தலுக்கு முன்பு அவர்களுக்கு இருந்திருக்கவில்லை.

ஏதோ ஒரு மிகப்பெரிய விபத்து போலத்தான் இந்தத் தேர்தல் முடிந்துள்ளது. மேலும், மக்கள் அவர்களுக்கு முழுமையான பெரும்பான்மையை வழங்கவில்லை. ஆட்சியைப் பிடிக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், அவர்கள் வென்றது வெறும் 108 இடங்கள் மட்டுமே. திமுகவினரின் உழைப்பால் வெற்றி பெற்றவர்களின் தயவில்தான் இன்று இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் தைரியமாகச் சொல்லலாம்.

இன்று தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீரழிந்துள்ளது. ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் வகையில் சில கோப்புகள் தன் மேஜையில் தயாராக இருப்பதாக முதலமைச்சர் மிரட்டுகிறார். தைரியம் இருந்தால் அந்த மூன்று கோப்புகளையும் உடனடியாகத் திறந்து வெளியிடட்டும். இதற்கெல்லாம் திமுக பயப்படாது. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Author

  • Balasubramanian K
    Balasubramanian K
#DMK #DMKvsTVK #Sekarbabu #Udayanidhi #உதயநிதி #சேகர்பாபு #தவெக #திமுக
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Article“வாக்குப் போர் வருமா? வழக்குப் போர் முடியுமா? 5 தொகுதிகளின் எதிர்காலம் நீதிமன்றம் கையில்!”
Next Article ரூ.20 லட்சம் பிணையில்லாத கடன்; கெளரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வு! அமைச்சர் வெளியிட்ட சலுகைகள்!
Balasubramanian K
  • Website

Related Posts

Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Dinakkadir

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026
Dinakkadir

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.