Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

புதுப்பதி கிராமத்துக்குள் புகுந்த யானைகள்: குட்டியுடன் ஆற்றில் நீராடி வனத்துக்குத் திரும்பின

September 19, 2026

ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி: திமுக நிர்வாகி உள்ளிட்டோர் மீது FIR பதிவு

September 19, 2026

ஒரே இடத்தில் 5, 10 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியர்கள் விவரம் சேகரிப்பு: தமிழக அரசு அதிரடி உத்தரவு

September 19, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Saturday, September 19
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » கோவை மதுக்கரையில் புதுமையான “புட் பேட்ரோல்” திட்டம்: டி.எஸ்.பி. சுரேஷ் துவக்கி வைத்தார்!

கோவை மதுக்கரையில் புதுமையான “புட் பேட்ரோல்” திட்டம்: டி.எஸ்.பி. சுரேஷ் துவக்கி வைத்தார்!

தினக்கதிர்AdminBy தினக்கதிர் and AdminJune 13, 20261 Min Read2 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கோவை, ஜூன் 13:

கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லையில், பொதுமக்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தவும் குற்றங்களை தடுக்கவும் “புட் பேட்ரோல்” (Foot Patrol) எனப்படும் நடை ரோந்து சேவை புதிய முயற்சியாகத் துவங்கப்பட்டுள்ளது. பேரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) சுரேஷ் இச்சேவையை நேற்று முறைப்படி துவக்கி வைத்தார்.

வழக்கமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து செல்லும் போது, குறுகலான பகுதிகள் அல்லது மக்கள் கூட்டத்தில் உள்ள சில நுணுக்கமான பிரச்சினைகளைக் கவனிப்பது கடினமாக இருக்கும்.

இத்திட்டத்தின் மூலம் போலீசார் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சாலைச் சந்திப்புகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் நேரடியாக நடந்து சென்று, பொதுமக்களிடம் நண்பர்களைப் போல் பழகி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார்கள்.

சேவை துவங்கிய முதல் நாளான நேற்று, மதுக்கரை நடராஜ் மருத்துவமனை சந்திப்பு, மதுக்கரை மார்க்கெட் மற்றும் போடிபாளையம் சாலை வழியாகப் பேரூர் டி.எஸ்.பி. சுரேஷ் தலைமையில், மதுக்கரை காவல் ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் மற்றும் காவலர்கள் தீவிர நடை ரோந்து மேற்கொண்டனர். அப்போது அப்பகுதி மக்களிடம் குறைகளையும், பாதுகாப்புச் சூழலையும் கேட்டறிந்தனர்.

இதுகுறித்து பேரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் கூறுகையில் “இந்த நடை ரோந்து சேவையானது இன்று முதல் தொடர்ச்சியாகப் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. வாகனங்களில் செல்லும்போது நமது கண்களில் படாமல் விடுபடும் பல விஷயங்கள், நேரடியாக நடந்து சென்று மக்களிடம் விசாரிக்கும் போது தெரியவர வாய்ப்புள்ளது. இது குற்றங்களைக் குறைக்கவும், மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் வெகுவாகப் பயன்படும்.”

Authors

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

  • Admin
    Admin
#Coimbatore #CoimbatorePolice #FootPatrol #Madukkarai #TamilNaduPolice
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Article*திண்டுக்கல் நகரில் சாலையோர ஆக்கிரமிப்பு: சட்டவிரோத வசூலைத் தடுத்து முறைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை!*
Next Article தமிழக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் அதிரடி இடமாற்றம்: அரசு உத்தரவு!
தினக்கதிர், Admin
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

தினக்கதிர், Admin
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

புதுப்பதி கிராமத்துக்குள் புகுந்த யானைகள்: குட்டியுடன் ஆற்றில் நீராடி வனத்துக்குத் திரும்பின

September 19, 2026
Dinakkadir

ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி: திமுக நிர்வாகி உள்ளிட்டோர் மீது FIR பதிவு

September 19, 2026
Dinakkadir

ஒரே இடத்தில் 5, 10 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியர்கள் விவரம் சேகரிப்பு: தமிழக அரசு அதிரடி உத்தரவு

September 19, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,095 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,974 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,342 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.