அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Walgreens India Pvt Ltd) நிறுவனம், சென்னையில் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre – GCC) அமைக்க உள்ளது.

தமிழ்நாடு அரசு உருவாக்கி வரும் OMR GCC வழித்தடத்தில், தரமணியில் உள்ள DLF Downtown வளாகத்தில் இந்த மையம் அமையவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (18.09.2026) கையெழுத்தானது.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசு உயர் அதிகாரிகள் மற்றும் வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஒப்பந்த ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர்.

இந்த புதிய உலகளாவிய திறன் மையத்தின் மூலம், முதல் ஆண்டிலேயே 250-க்கும் மேற்பட்ட உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. தொடர்ந்து நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி, கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் சில்லறை வணிகத் தொழில்நுட்பத் துறையில் உலகளாவிய செயல்பாடுகளை மேற்கொள்ளும் வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் முதலீடு, சென்னையின் Healthcare மற்றும் Retail Tech Ecosystem வளர்ச்சிக்கு புதிய ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், OMR பகுதியை உலகளாவிய நிறுவனங்களின் திறன் மையங்கள் அமையும் முக்கிய வழித்தடமாக உருவாக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு இந்த முதலீடு வலுசேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

  • Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Share.

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Leave A Reply

Exit mobile version