உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறும் வழக்குகளை நடத்துவதற்காக மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய புதிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை (நீதிமன்றங்கள்-4) துறை சார்பில் 14.08.2026 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்திய அட்டர்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல், அனைத்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் மற்றும் 35 மூத்த வழக்கறிஞர்கள் இடம்பெறும் குழுவுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த குழுவில் மூத்த வழக்கறிஞர்கள் கே.கே.வேணுகோபால், டாக்டர் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல், முகுல் ரோஹத்கி, சி.எஸ்.வைத்தியநாதன், ப.சிதம்பரம் உள்ளிட்ட பல முக்கிய சட்ட நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் நலன்களை உச்சநீதிமன்றத்தில் பாதுகாக்கும் வகையில், இந்த மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்குகளை நடத்துவதற்கான நடைமுறைகள் தொடரப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உச்சநீதிமன்ற வழக்குகளில் மூத்த வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான நிலையான செயல்முறை (SOP) மற்றும் அவர்களுக்கான கட்டண நடைமுறைகள் ஏற்கெனவே உள்ள அரசாணைகளின்படி பின்பற்றப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author

Share.
Leave A Reply

Exit mobile version