தமிழக அரசின் நிதி நிலை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்த அவர், மின்சார வாரியம், போக்குவரத்துத் துறை மற்றும் ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் கடும் நிதிச் சுமையை எதிர்கொண்டு வருவதாகவும், மாநிலத்தின் நிதி நிலைமை சவாலான கட்டத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மாநிலத்தின் நிதி வளங்களை மேம்படுத்துவதற்கு முந்தைய அதிமுக மற்றும் திமுக அரசுகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நிதி வளங்கள் வலுப்படுத்தப்பட்ட பிறகு, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு மக்களுக்காகப் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.

Author

Share.
Leave A Reply

Exit mobile version