சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் (Tamil Nadu Medical Council) சார்பிலான விருதுகள் வழங்கும் விழாவில், மக்கள் நலனுக்காக சிறப்பான சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் அருண்ராஜ், விருது பெற்ற மருத்துவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், மக்கள் நலனை பாதுகாக்கும் மருத்துவர்களின் நலனில் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரத்தில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் தனது மருத்துவர் பதிவுக்கான புதுப்பிக்கப்பட்ட பதிவு சான்றிதழையும் அமைச்சர் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் டாக்டர் தரேஸ் அகமது, இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ. முருகநாதன், பதிவாளர் டாக்டர் ஏ. செந்தில் வடிவு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் தற்காலிக குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

Author

Share.
Leave A Reply

Exit mobile version