கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை வடகோவை பகுதியில் அமைந்துள்ள காமராஜர் பூங்காவில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காமராஜர் பாசறை சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி வெகு சிறப்பாக மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த விழாவிற்கு காமராஜர் பாசறையின் மாநில பொதுச் செயலாளர் கோவை எஸ்.ஜான்சன் தலைமை தாங்கி, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விழாவினைத் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் காமராஜர் பாசறையின் மாநில, மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
மாநில நிர்வாகிகள்: கொள்கை பரப்பு செயலாளர் ஜோன்ஸ் நாடார், கௌரவ ஆலோசகர் எம்.கே. ஆறுமுகம் அண்ணாச்சி மற்றும் இளைஞர் அணி செயலாளர் எஸ்.பி.ஐகோர்ட் துரை.
மாவட்ட நிர்வாகிகள்: கோவை மாவட்ட தலைவர் ஜே.கே. கப்பல், மாவட்ட செயலாளர் ஐ.வினித்ராஜ், துணை செயலாளர் கே.சுஜில் ஏசா, மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்.வேல்முருகன், ஜெயசீலன்.
கிளை நிர்வாகிகள்: குரும்பபாளையம் கிளை தலைவர் ஐ.ராஜேஷ், செயலாளர் ராபின்சன் மற்றும் பொருளாளர் ஜான் சேவியர்.
இந்நிகழ்ச்சியில் காமராஜர் பாசறையின் மாநில, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்கள் எனப் பலரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, கல்வித் தந்தை காமராஜரின் புகழைப் போற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பாசறையின் சார்பில் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.

