தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில், கணக்கில் காட்டப்படாத சுமார் ரூ.37.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநரின் உத்தரவின் பேரில், மாவட்ட ஆய்வுக்குழு அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இணைந்து, கடந்த 04.06.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத பணம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மாவட்ட வாரியான கைப்பற்றப்பட்ட பண விவரங்கள்:

வ.எண்மாவட்டம்அலுவலகம்கைப்பற்றப்பட்ட தொகை (ரூ.)
1சென்னைசவுகார்பேட்டை32,000
2சென்னைவிருகம்பாக்கம்2,07,300
3சென்னைசெம்பியம்1,48,000
4சென்னைகொன்னூர்84,000
5சென்னைஅடையாறு (எல்.பி. சாலை)56,130
6மதுரைபொதும்பு11,800
7மதுரைவில்லாங்குடி87,000
8விருதுநகர்விருதுநகர் – 254,000
9விருதுநகர்சாத்தூர்20,000
10ராமநாதபுரம்பரமக்குடி5,500
11ராமநாதபுரம்ராமேஸ்வரம்9,900
12சிவகங்கைகாரைக்குடி73,000
13தேனிபோடி20,000
14திண்டுக்கல்கொடைக்கானல்23,000
15திண்டுக்கல்நிலக்கோட்டை5,000
16தூத்துக்குடிகோவில்பட்டி55,500
17தூத்துக்குடிஒட்டப்பிடாரம்2,00,000
18தென்காசிஆலங்குளம்28,400
19திருநெல்வேலிபாளையங்கோட்டை 1 & 250,620
20திருநெல்வேலிவி.கே.புரம்42,070
21கன்னியாகுமரிஎடலாக்குடி38,080
22கன்னியாகுமரிகோட்டாரம்3,300
23கரூர்குளித்தலை90,000
24திருச்சிதிருவெறும்பூர்52,700
25திருச்சிதுறையூர்30,000
26பெரம்பலூர்பெரம்பலூர்13,500
27தஞ்சாவூர்வல்லம்30,020
28நாகப்பட்டினம்திருபூண்டி51,500
29திருவள்ளூர்திருவள்ளூர்1,89,800
30வேலூர்வேலூர் – 175,550
31கடலூர்விருத்தாச்சலம்1,50,000
32கடலூர்கம்மாபுரம்24,500
33விழுப்புரம்விழுப்புரம் – 151,600
34திருவண்ணாமலைசெங்கம்3,700
35செங்கல்பட்டுகூடுவாஞ்சேரி1,55,100
36திருப்பத்தூர்திருப்பத்தூர்3,22,100
37ராணிப்பேட்டைஆற்காடு1,020
38கள்ளக்குறிச்சிமணலூர்பேட்டை1,21,200
39கோவைகாந்திபுரம்1,21,400
40கோவைதொண்டாமுத்தூர்1,12,800
41திருப்பூர்பொங்கலூர்2,53,000
42ஈரோடுபவானி85,600
43நீலகிரிகூட்டு – 149,660
44சேலம்சேலம் கிழக்கு – 13,18,700
45கிருஷ்ணகிரிசூளகிரி1,50,010
46நாமக்கல்ராசிபுரம்67,500
மொத்தம்37,75,650

அதிகபட்சமாக சேலம் (ரூ. 3.18 லட்சம்) மற்றும் திருப்பத்தூர் (ரூ. 3.22 லட்சம்) ஆகிய இடங்களில் அதிக அளவில் பணம் சிக்கியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை தமிழக பதிவுத்துறை அலுவலகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தொகை தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Author

Share.
Leave A Reply

Exit mobile version