நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் கிராமத்தில் ஆயுதம் காத்த அம்மன், சீதாளதேவி மாரியம்மன் கோவில் உள்ளது.


இக்கோவிலில் வருடாந்திர திருவிழா கடந்த 12 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.


முன்னதாக பக்தர்கள் பால் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர். தொடர்ந்து இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சாமி வீதி உலா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

Author

Share.
Leave A Reply

Exit mobile version