நாகப்பட்டினம் மாவட்ட கால்நடை மருத்துவமனை மற்றும் மாவட்ட நூலகம் – அறிவுசார் மையம் ஆகியவற்றில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானியர் பிரவீன் குமார் அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் பின்வருமாறு:
கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையத்தை (ABC) பார்வையிட்ட ஆட்சித்தலைவர், மாவட்டத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த ஏதுவாக நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட உத்தரவிட்டார்.

நகராட்சி சார்பில் தெருநாய்களைப் பிடித்து, ஒருங்கிணைத்து இந்த மையத்திற்கு கொண்டு வர வேண்டும். தெருநாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
வெறிநாய்க்கடி (Rethies) தடுப்பூசி போடும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அவசரகால சிகிச்சை ஊர்தி (1962) ஆய்வு:
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இயங்கி வரும் 1962 அவசரகால சிகிச்சை ஊர்தியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இச்சேவையின் மூலம் கால்நடை வளர்ப்போர்களின் இருப்பிடத்திற்கே சென்று, அதிக அளவிலான கால்நடைகளுக்குச் சிறந்த முறையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று ஊழியர்களை அறிவுறுத்தினார்.

மாவட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் ஆய்வு:
அதனைத் தொடர்ந்து, மாவட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்குச் சென்ற ஆட்சித்தலைவர், அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

பதிவேடுகள் சரிபார்ப்பு: பொதுமக்கள் நூலகத்திற்கு வந்து செல்லும் அனுமதிப் பதிவேடு மற்றும் புத்தகங்களின் எண்ணிக்கை குறித்த பதிவேடுகளைச் சரிபார்த்தார். நூலகத்தில் உள்ள புத்தகங்கள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதைப் பார்வையிட்டார்.

போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், மின்சாரம், காற்றோட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய நூலக அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் நூலகத் துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.

Author

Share.
Leave A Reply

Exit mobile version