தமிழ்நாடு அரசின் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள செங்கோட்டையனுக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மாநிலத்தலைவர் சி.இரவிவர்மன் தலைமையில் மாநில பொதுசெயலாளர் அ.இதயசெல்வன், துணைத்தலைவர்கள் பழனிவேலு,ரமேஷ் உள்ளிட்டோர் சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இச்சந்திப்பின் போது தொழிற்கல்வி ஆசிரியர்களின் ஓய்வூதியம், அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்கவேண்டும், மற்றும் அரசு ஆணை எண் 306-நாள் 12.09.2018 ன் படி 2006-ல் தேர்வுநிலை பெற்ற அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் தர ஊதியம் ரூ5400/- என்பதை மாநில கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம் உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனே செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் செங்கோட்டையன் தொழிற்கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.
இருபது ஆண்டுகளுக்கு மேலாக தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவராக உள்ள சி.இரவிவர்மனுக்கு நிதி அமைச்சர் செங்கோட்டையன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
