அனுப்பர்பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஸ்ரீ ஆதி ஈஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் அனுப்பர்பாளையம் சாஸ்திரி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஸ்ரீ ஆதி ஈஸ்வரர் திருக்கோவிலில் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா நடைபெற்று வருகிறது.

கும்பாபிஷேக சர்வ சாதகம் சைவாகம ரத்னாகரம் ஆகமப்பிரவீனா சிவஸ்ரீ டி.முத்து சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமை குருக்கள் திருமுருகன் பூண்டி அருள்மிகு திருமுருகநாதர் சுவாமி திருக்கோயில் அவர்கள் தலைமையில்18- 5 -2026 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்திபெரு விழா அபிஷேக அலங்கார அர்ச்சனை தசதான தச தரிசனம் மற்றும் அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

19-5-2026 செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து 12 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும் இந்த திருக்கோயிலுக்கு அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.விஜயகுமார் அவர்கள் வருகை தந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அம்மனின் அருள் ஆசி பெற்றார்.

அவருடன் பத்தாவது வார்டு அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கோவில் சார்பாகவும் அதிமுக நிர்வாகிகள் சார்பாகவும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.விஜயகுமார் அவர்களுக்கு பொன்னாடை போற்றி வரவேற்பளித்தனர்.

Author

Share.
Leave A Reply

Exit mobile version